வாகனங்கள் மிகுந்த நெடுஞ்சாலையின் நடுவே ஓடி வந்த 2 வயது குழந்தை: வெளியான பகீர் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் பாய்ந்து சென்றுக்கொண்டு இருந்தபோது 2 வயது குழந்தை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Oregon மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நகரத்திற்குட்பட்ட 101 நெடுஞ்சாலையில் கடந்த 9ம் திகதி அப்பகுதி பொலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு நேரமாக இருந்தாலும், சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற வாகனங்கள் பாய்ந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளன.
இந்நிலையில், மிதமான வேகத்தில் சென்ற பொலிசாரின் ரோந்து வாகனம் திடீரென சாலையின் மையத்தில் நின்றுள்ளது.
அப்போது எதிரே சாலையின் நடுவே 2 வயதான குழந்தை ஒன்று துள்ளிக் குதித்துக்கொண்டு பொலிசார் வாகனம் நோக்கி வந்துள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத பொலிசார், உடனடியாக காரின் கதவினை திறந்துக்கொண்டு குழந்தையை மீட்டுள்ளனர்.
எனினும், குழந்தையின் பெற்றோர்கள் குறித்தும் அது எந்த திசையிலிருந்து வந்தது என பொலிசாருக்கு உடனடியாக தெரியவில்லை.
பின்னர், பொலிசாரின் விசாரணையை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார் ஒருவர், சாலையில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் பொலிசார் காரை நிறுத்தி செயல்பட்டதால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், பொது இடங்களுக்கு குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating