மலேசியாவில் கார் விபத்து: கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற 3 பக்தர்கள் பலி…!!
Read Time:1 Minute, 1 Second
மலேசியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று கொண்டிருந்தனர்.
செரிபெட்டாலிங் பகுதியில் வடக்கு, தெற்கு நெடுஞ்சாலை பகுதியில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு கார் புகுந்து மோதியது.
அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கெபங்சான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
Average Rating