காஷ்மீரில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை சாவு…!!
Read Time:1 Minute, 26 Second
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள டாப் அங்ரால்லா பகுதியை சேர்ந்த நசீம் பானு(3) என்ற அந்த சிறுமி நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகாமையில் உள்ள புதர்களுக்குள் மறைந்து, மறைந்து வந்த ஒரு சிறுத்தைப்புலி கண்ணிமைக்கும் நேரத்தில் நசீமா மீது பாய்ந்து, அவளை கவ்விக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியது.
பதறிப்போன அப்பகுதி மக்கள் சிறுத்தையை விரட்டிக்கொண்டே காட்டுக்குள் ஓடினர். வெகுதூரம்வரை சென்று தேடியபோது சிறுத்தையால் கடித்துக் குதறி, சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் நசீம் பானு பிணமாக கிடந்தாள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating