அழிக்கப்படவுள்ள ஆபிரிக்க யானைத் தந்தங்கள்…!!
Read Time:1 Minute, 8 Second
சுங்க திணைக்களத்தினால் கடந்த 2012ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆபிரிக்க யானைத் தந்தங்கள் அழிக்கப்படவுள்ளன.
இவை 40 கோடி ரூபாவுக்கும் அதிகமான தந்தங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வு காலி முகத்திடலில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை பார்வையிடுவதற்காக, அழிவடையும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சயிட்டிஸின் பொது செயலாளர் ஜோன் ஸ்கென்லன் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது 359 யானைத் தந்தங்கள் அழிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜோன் ஸ்கென்லன் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating