நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டது…!!

Read Time:1 Minute, 18 Second

train_2_0-626x380 (2) (1)இன்று காலை காலி திசை நோக்கி பயணித்த புகையிரதம் மற்றும் கொழும்பு திசை நோக்கி பயணித்த புகையிரதமும் கிங்தோட்டையில் வைத்து நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதம், புகையிரத பாதை அறிகுறிகளை கவனிக்காது பயணித்ததால் ஏற்படவிருந்த விபத்தே இது என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் போது மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட கடுகதி புகையிரதத்தின் சாரதி முன்னாள் வந்த புகையிரதத்தை பார்த்தவுடன் புகையிரதத்தை நிறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழு ஒன்று, சம்வம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பாய் ரயிலில் சிக்கி பெண் பலி…!!
Next post பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது…!!