பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது…!!

Read Time:1 Minute, 39 Second

abuse (4)பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக காவல் துறை ஊடக பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமியின் பாட்டி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 வயதான சிறுமி ஹெட்டன் பிரதேசத்தை சேர்ந்ததுடன், அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமி அவரது மூத்த சகோதரியுடன், மாளிகாவத்தையில் அமைந்துள்ள பாட்டனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த வீட்டில் பல முறை சிறுமி, பாட்டனார் மற்றும் மைத்துனரினால் பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சிறுமி தனது, தந்தையினாலும் துஷ்பிரயோகம் படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டது…!!
Next post மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ள 13 வயதேயான சிறுமியின் சடலம் மீட்பு…!!