மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ள 13 வயதேயான சிறுமியின் சடலம் மீட்பு…!!

Read Time:2 Minute, 0 Second

death (2)குருநாகல் – மாவத்தகமை – தல்கஸ்பிடியை பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து 13 வயதினையுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்ததின் பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக வெளி அவதானிப்புக்களில் இருந்து தெரியவருவதாக மாவத்தகமை காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனையின் பின்னரே சம்பவம் தொடர்பாக ஓர் நிலையான முடிவுக்கு வர முடியும் என எமது செய்தி பிரிவிற்கு அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இதேவேளை , குறித்த சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களை விசாரணைக்காக காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசித்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை தனது வீட்டில் இருந்து பால் விற்பனைக்காவே குறித்த சிறுமி சென்றுள்ளார்.

குறித்த சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதலை ஆரம்பித்துள்ளனர் .

இன்னிலையில், நேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது…!!
Next post சீனாவினால் அமைக்கப்படும் மிதக்கும் அணுமின் நிலையம்..!!