கொழும்பு மாவட்டத்தில் 9883 இடங்கள் சோதனை…!!
Read Time:1 Minute, 18 Second
மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற டெங்கு பரவும் அபாய நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் 9883 பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபை கூறியுள்ளது.
இதற்காக முப்படையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மூன்று நாள் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததாக அதன் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களில் 10 வீதமானவை டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் 2 வீதமான சூழல் நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடியவாறு காணப்பட்டதாக அவர் கூறினார்.
மேல்மாகாணத்தில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற போதும் டெங்கு பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Average Rating