உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி…!!
Read Time:42 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு மற்றும் மூன்று வயது சிறுமிகள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இங்குள்ள கல்யான்பூர் கிராமத்தை சேர்ந்த ஷக்தி(4), ஷிம்லா(3) ஆகியோரின் சிதைந்த பிரேதங்களை கைப்பற்றியுள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating