தாய்ப்பால் பருகிய குழந்தை உயிரிழப்பு…!!
Read Time:57 Second
பொகவந்தலாவை, லொயினோன் தோட்டத்தில் தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விமலன் நவனீதன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னரே குழந்தை உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படும் என்று தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating