ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து; பலர் சாவு…!!
Read Time:1 Minute, 9 Second
ஜேர்மனியின் பவரியா மாநிலத்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாட் எய்பிலிங் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 15 பேர் ஆபத்தான காயங்களுடன் காணப்படுகின்றனர், 40 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
அதில் ஒரு ரயில் முற்றாக தடம்புரண்டுள்ளதோடு பெட்டிகளிற்கு நடுவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோசமான புகையிரத விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating