வண்ணாரப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை..!!

Read Time:1 Minute, 10 Second

8927186f-6179-40f1-93fa-40334e2f26aa_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டை குப்பம்மாள் தெருவில் வசித்து வருபவர் சல்மா. நேற்று மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த 40 பவுன் நகையை காணவில்லை. சல்மா வெளியே சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது.

பீரோவில் துணியின் கீழ் மறைத்து வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை கொள்ளை கும்பல் கவனிக்கவில்லை. இதனால் பணம் தப்பியது.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி…!!
Next post என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!… உங்களை திருத்தவே முடியாது…!!