சி.சி.டி.வி கமரா வேண்டாம்-கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்..!!
Read Time:1 Minute, 2 Second
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.டி.வி கமரா பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் வருகை தந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் விமானத்தினுள் நுழைவதற்கும் முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating