மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது…!!
Read Time:1 Minute, 18 Second
தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டில் தந்தையொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் யூலை மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டுள்ளார்.
பத்தேகம – ஹல்பாதொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய குறித்த சந்தேகநபர் தொடர்பில் அவரது மனைவியே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கராப்பிடிய மருத்துவமனையின் மேற்கொள்ளப்படட மருத்துவ சோதனையின் போது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating