பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை
Read Time:1 Minute, 15 Second
பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை- புலிகளினால் வன்னியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பொலீஸ் உத்தியோகத்தர் போபிட்டிகொடவை விடுதலை செய்யும் உத்தேசம் ஏதும் இல்லையென புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். அடுத்த வழக்குத் தவணைவரை போபிட்டிகொட புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரிகள் மூவர் மன்னார் முருங்கன் அரிப்பு பகுதிக்கு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒரு வெளிநாட்டவரை கைதுசெய்ய புலிகளின் பகுதிக்கு சென்றபோதே மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டதும் அதில் இருவர் விடுவிக்கப்பட்டதும் தெரிந்ததே.
Average Rating