சிதம்பரத்தில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஜெயா (வயது 40). இவர்களது மகள் நவசக்தி (15). அந்த பகுதியில் உள்ள தனியார் பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நவசக்தியை அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (23) என்பவர் விரும்பினார். இவர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். செந்தில்குமாருக்கு நவசக்தி முறைப் பெண் ஆவார்.
நவசக்தி பள்ளிக்கு செல்லும் போது செந்தில் குமார் பின் தொடர்ந்து சென்று தனது காதலை வெளிப்படுத்தினார். நவசக்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், செந்தில் குமார் தனது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து அவர் நவசக்தியிடம் தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
இந்த சம்பவம் நவசக்தியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நவசக்தியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் கூறிவிட்டனர். அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வீட்டை விட்டு வெளியே வராததால் நவசக்தியை சந்திக்க முடியாமல் செந்தில்குமார் மனவேதனை அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு 9.30 மணிக்கு மாணவியின் வீட்டிற்கு செந்தில்குமார் சென்றார்.
நவசக்தியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் உனக்கு திருமணம் செய்துதர முடியாது என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில் செந்தில்குமார் ஆத்திரம் அடைந்தார். அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்தார். நவசக்தியின் தாய் ஜெயா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை செந்தில்குமார் கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் ஜெயா மயங்கி விழுந்தார். உடனே செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் செந்தில்குமார் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating