ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்: 4 மாத பெண் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றவள் கைது…!!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி 4 மாத பெண் குழந்தையின் பிரேதம் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தடயவியல் பரிசோதனையில் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கைநகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அந்தப்பெண்ணை ‘உரியமுறையில்’ விசாரித்தபோது, ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெண்ணாக வந்து பிறந்து விட்டதால் ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating