வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த 18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!!
சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த சாகுல் அமீத்வின் பயணப் பையை சோதனை செய்த போது அமெரிக்க டொலர், யூரோ பணம் இருந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18 லட்சம் ஆகும்.
விசாரணையில் சாகுல் அமீத் சுற்றுலா விசாவில் இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிந்தது.
அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating