15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு தற்கொலை..!!
உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் மாவட்டத்தில் உள்ளது இஷாநகர். இந்த ஊரைச்சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப், சுந்தர், மனோஜ் ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து அந்த சிறுமியை கற்பழித்தனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இது சம்மந்தமாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமி மிகவும் மனஉளைச்சலுடன் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating