திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை…!!

Read Time:3 Minute, 24 Second

201609301336238453_wife-killed-truck-driver-suicide-near-tirupur_secvpfதிருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது 26). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (18). இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் லாரி டிரைவர் கோபிக்கும் லலிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சிறிது நாட்களுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த லலிதாவின் முதல் கணவர் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இது குறித்தான பிரச்சினையில் லலிதா 2-வது கணவர் கோபியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் லலிதா கோபியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்யப்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கோபி தனது மனைவியுடன் திருப்பூருக்கு வந்தார். திருப்பூரில் உள்ள டி.கே.ஆர். காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். கோபி அங்குள்ள தண்ணீர் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபி மனைவி லலிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

மனைவி இறந்தது உறுதியான பின்னர் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று கோபி பயந்தார். இதனால் கோபி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதன்படி லலிதாவின் சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று இரவு வரை இவர்களின் வீடு திறக்கப்படாததை அறிந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தவாசல் அருகே தந்தையை கொன்ற பிளஸ்-2 மாணவன் ஜெயிலில் அடைப்பு…!!
Next post திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது…!!