புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது…!!

Read Time:1 Minute, 58 Second

201610051447118361_young-man-knife-attack-four-arrested-near-pulianthope_secvpfபெரம்பூர் ராஜாஜிநகரை சேர்ந்தவர் ஹரிஸ் (21). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவன், சசிகுமார், பார்த்தீபன், ராஜி ஆகியோர் பேசி கொண்டு இருந்தனர். இதை ஹரிஸ் தட்டி கேட்டார். அப்போது 4 பேரும் ஹரிசை கத்தியால் குத்தினர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

திருநின்றவூர் திருவேங்கட நகரை சேர்ந்த சரவணன். இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆவடியை சேர்ந்த நமச்சிவாயம் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நமச்சிவாயத்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுரேஷ், பிரபாகரன், சிக்கந்தர், பழனி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிக்கரணை பகுதியில் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த வேலு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை…!1
Next post பெங்களூரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி-பலர் காயம்…!!