பெங்களூரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி-பலர் காயம்…!!
கர்நாடகா மாநிலம் பெங்களூர், பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த கட்டிடம் மளமளவென சரிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
இதுபற்றி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த சமயத்தில் சாலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
கட்டிடப்பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், 2ம் மாடியில் தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். மேலும், தரமற்ற கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டிடம் கட்டியிருப்பதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Average Rating