மனைவியின் தங்கையுடன் கள்ளஉறவு? கணவரை எரித்துக் கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்…!!
புதுவையில் மனைவியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் எரித்துக் கொன்றதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த தம்பதி அருணகிரி-நெய்ரோஜா, டிராபிக் பொலிசாக இருக்கும் அருணகிரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நெய்ரோஜாவுக்கு, அவருடைய அக்காள் கணவரான சிவானந்தம் ராபர்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக அருணகிரி சந்தேகித்தார்.
இதனால் கோபம் கொண்ட அருணகிரி, சிவானந்தம் ராபர்டை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சிவானந்தம் ராபர்ட், அருணகிரியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இதற்காக நண்பர்களின் துணையுடன் மது ஊற்றிக் கொடுத்து அருணகிரியை கொலை செய்தார்.
தொடர்ந்து அருணகிரியின் பிணத்தை கடலூர் அருக்கே காட்டுக்கு எடுத்து சென்று எரித்துள்ளனர், சாம்பலையும் கடலில் கரைத்தனர்.
இதற்கிடையே அருணகிரி மாயமாகிவிட்டதாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அருணகிரியை யாரோ கொலை செய்து விட்டதாக ரகசிய தகவல் பொலிசுக்கு கிடைத்துள்ளது.
இதன்பேரில் சிவானந்தம் ராபர்டை அழைத்து விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்தன.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் தான் நெய்ரோஜாவுக்கும்- அருணகிரிக்கும் திருமணம் செய்து வைத்தேன்.
தவளக்குப்பத்தில் எனக்கு சொந்த வீடு உள்ளது, அங்கு இருவரையும் குடியமர்த்தினேன்.
அடிக்கடி நாங்கள் குடும்பத்துடன் அவர்கள் வீட்டுக்கு செல்வோம், அவர்களும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.
இந்நிலையில் எனக்கும், நெய்ரோஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அருணகிரி சந்தேகப்பட்டார். ஆனால் அப்படி எதுவும் எங்களுக்குள் இல்லை.
இதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார், தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வந்தார்.
இதனால் கொலை செய்ய திட்டமிட்டு கதையை முடித்தேன் என தெரிவித்துள்ளார்.
பொலிசார் கூறுகையில், அருணகிரியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது கடைசியாக சிவானந்தம் ராபர்ட்-டுடன் பேசியது தெரியவந்தது, இதனாலும் பல்வேறு காரணங்களினாலும் அவர் மீது சந்தேகம் வலுத்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினோம், உண்மைகள் வெளிவந்தது என கூறியுள்ளனர்.
Average Rating