இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது! ஆட்டை வெட்டி ரத்தப்பலி கொடுத்த விமான ஊழியர்கள்…!!
Read Time:1 Minute, 15 Second
பாகிஸ்தானில் ரன்வேயில் விமானத்துக்கு அருகே கருப்பு ஆடு வெட்டி பலிகொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 7ம் திகதி விபத்துக்குள்ளானது.
பத்து ஆண்டுகளாக விபத்திலா விமான நிறுவனம் என்ற பெருமையை பெற்ற பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு இது கரும்புள்ளியாக அமைந்தது.
இதனையடுத்து தன்னுடைய அனைத்து விமானங்களையும் தரையிறக்கி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது.
தொடர்ந்து கடந்த 18ம் திகதி மீண்டும் பறக்க தயாரானது, அப்போது விமான ஊழியர்கள் சிலர், கருப்பு ஆட்டை ரன்வேயில் விமானத்துக்கு அருகில் கழுத்தை அறுத்து பலி கொடுத்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகவே, பலரும் மூடநம்பிக்கையான செயல் என கிண்டல் செய்து வருகின்றனர்.
Average Rating