பூமியில் தரையிறங்கிய மர்ம பொருள்: ஏலியன்ஸ் என பீதியடைந்த மக்கள்..!! (வீடியோ)
கொலம்பியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தரையிறங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Luisa Garci என்ற கிராமத்தில் உள்ள பண்ணை பகுதியில் குறித்த மர்ம பொருள் தரையிறங்கியுள்ளது.
பின்னர் அது கூகுளின் உபகரணங்களில் ஒன்றான உலகம் முழுவதும் உள்ள தொலைதூர பகுதிகளில் இணைய இணைப்பு வழங்க பயன்படுத்தப்படும் பலூன்கள் என உள்ளூர் மக்களுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து Tolima பொலிஸ் அதிகாரி கூறியதாவது, செயலிழந்த பலூன் பூமியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளார்.
அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர், முதலில் இதை கண்ட கிராம மக்கள் அனைவரும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் என கருதி பீதியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரங்களில் பூமியில் விழுந்து நொறுங்கும் கூகுளின் இரண்டாவது பலூன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திற்கு குறித்து உள்ளூர் மக்களிடம் கூகுள் நிறுவனம் மனிப்பு கோரியுள்ளது.
Average Rating