திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி: தாய்லாந்தைச் சேர்ந்தவர் முடி சூடினார்..!! (படங்கள்)
திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப்போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது.
உலகளவில் பிரபலம்வாய்ந்த இந்தப் போட்டியில் இம்முறை தாய்லாந்தைச் சேர்ந்த 24 வயதான ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.
இறுதிப் போட்டியில் 27 திருநங்கைகள் பங்குபெற்றிருந்தனர்.
திருநங்கைகளைப் போற்றும் வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது.
தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 2 முறையும், வெனிசுலா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
குறித்த போட்டியில் பங்குபெறும் திருநங்கைகள் பிறக்கும்போது கண்டிப்பாக ஆணாக பிறக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.
இந்த ஆண்டின் அழகியாக வெற்றி பெற்றுள்ள ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
தற்போது மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
Average Rating