தாம்பத்தியத்தில் பெண்களுக்கு சந்தேகம் வருவது ஏன்?..!!
பொதுவாக பெண்களுக்கு செக்ஸ் உறவில் குழப்பம் இருப்பது வழக்கம். அதுவும் 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் மனதில் இருப்பது தங்களின் செக்ஸ் உணர்வு குறைந்து விடுமா என்கிற சந்தேகம் தான். ஆனால், அப்படி எல்லாம் இருக்காது. இது உண்மையில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 30 வயதை அடைந்துவிட்டாலே, பெண்கள் தங்களின் செக்ஸ் உணர்வு குறைந்து விடும் என்ற நினைக்கின்றனர். ஆனால், இதற்கு பெண்களின் உடல், இரத்தம் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றம் தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
30 வயதனை தாண்டிய பெண்களுக்கு அதிகப்படியான உடல் பருமன் அல்லது இரத்தம் குறைவு, எலும்பு தேய்மானம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் செக்ஸ் உறவில் உச்சநிலையை அடைவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஏனென்றால் நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன்கள் சுரப்பிகளில் சீரற்ற தன்மையில் இருப்பதால் செக்ஸ் உறவில் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில பெண்களுக்கு செக்ஸ் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். ஆனால் உண்மையில் சொல்லப்போனால், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களால் தான் செக்ஸ் உறவில் உழு ஈடுபாட்டுடனும், நிம்மதியுடனும், முழுமையான இன்பத்துடனும் ஈடுபட முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
மெடிக்கல் ரீதியாக செக்ஸ் உணர்வுகலை கட்டுப்படுத்துவதில் மூளை மற்றும் மனதிற்கு முக்கிய் பங்கு உள்ளது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு சரியான வழியில் தங்களின் செக்ஸ் உணர்வுகளை திசை திருப்பினார் செக்ஸ் உறவில் சிறப்பாக இருக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating