நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னிலையில் உள்ளது
312 உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 145517 வாக்குகளைப் பெற்றதால் 128 உறுப்பினர்களை பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி 95313 வாக்குகளைப் பெற்று 67 ஆசனங்களை பெற்றுள்ளது.
இதைத்தவிர சிறீ.ல.மு. காங்கிரஸ் 48918 வாக்குகளுடன் 30 ஆசனங்களையும், மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட சுயற்சைக்குழு (03) 82580 வாக்குககளால் 23ஆசனங்களையும் பெற்றுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பியினர்) 32577 வாக்குகளைப் பெற்று 17ஆசனங்களும், தேசிய ஐக்கிய முன்னணி 2568 வாக்குகளால்; 14ஆசனங்களும், ஜாதிக ஹெல உறுமய 22006வாக்குகளால் 14ஆசனங்களும் பெற்றுள்ளன.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 23202 வாக்குகளால் 12 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது இவ்விதமிருக்க சுயேட்சைக்குழு 6 ஆனது 9ஆசனங்களுதம், தேசிய காங்கிரசானது 9ஆசனங்களும், தேசிய அபிவிருத்தி முன்னணியானது 8ஆசனங்களும், லிபரல்கட்சி 6ஆசனங்களும் பெற்றுள்ளன. சுயேட்சைக்குழு 4, சுயேட்சைக்குழு 2, மேலக மக்கள் முன்னணி என்பன தலா நான்கு ஆசனங்களையும், மலையக மக்கள் முன்னணி 2ஆசனங்களும் பெற்றுள்ளன.
Average Rating