உதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வழிக்கேட்ட பெண்ணை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே மாகாணத்தில் உள்ள Lauwil பகுதியில் 18 வயதான வாலிபர் ஒருவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது, வழியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார்.
தூரத்தில் வாலிபர் ஒருவர் வருவதைக் கண்ட பெண் அவரை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட முகவரிக்கு செல்ல வழிக்கேட்டுள்ளார்.
வாலிபர் வழியை கூறிவிட்டு சிறிது தூரம் பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர், சுற்றும் ஆட்கள் இல்லாததை உறுதி செய்த வாலிபர் திடீரென பெண் மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.
வாலிபரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த பெண் தடுமாற்றத்துடன் அலறியுள்ளார். ஆனால், வேகமாக செயல்பட்ட வாலிபர் பெண்ணின் ஆடைகளை களைத்து கற்பழிக்க முயன்றுள்ளார்.
எனினும், தன்னுடைய முயற்சியை கைவிடாத பெண் வாலிபரை பலம் கொண்டு தடுத்துள்ளார். மேலும், உதவிக்கு வருமாறு சத்தமாக அலறியுள்ளார்.
பெண்ணின் அலறலால் அச்சமுற்ற நபர் உடனடியாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் பின்னர் பொலிசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது. பெண்ணை கற்பழிக்க முயன்றதாக கூறப்படும் அந்த வாலிபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், வாலிபரின் அங்க அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் வெளியே செல்லும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாரு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating