70வயது பெண் இரட்டை குழந்தை பெற்று கின்னஸ் சாதனை படைத்தார்
Read Time:1 Minute, 19 Second
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள டோகாட் கிராமத்தை சேர்ந்த ஓம்காரி (வயது70) இவருக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஓம்காரிக்கு முசாபர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் பிரசவம் நடந்தது அதில் ஓர் ஆண்குழந்தை ஒருபெண்குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தள்ளன தாயும் குழந்தையும் நலமாகவுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த போசதா என்ற பெண் கடந்த 2006 டிசம்பர் மாதம் தனது 67வயதில் இரட்டை குழந்தை பெற்றதே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது செயற்கை கருத்தரிப்பு மூலம் கர்ப்பிணியான இவருக்கு 2ம் ஆண்குழந்தைகள் பிறந்தன இவருடைய சாதனையை ஓம்காரி முறியடித்துள்ளதால் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating