படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!!
தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம். இவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு “பேட் மேன்” என்ற படமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் “பேட் மேன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தொடர்பாக சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பார்த்து கோவாவில் உள்ள ஒரு பெண்கள் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது். காரணம் இவர்களும் அருணாசலம் முருகானந்தம் போல் மட்கும் வகையிலான சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கோவாவில் பனாஜியில் இருந்து 45 கிமீ. தொலைவில் உள்ள பிசோலிம் தாலுகாவில் உள்ள முல்கோ கிராமத்தை சேர்ந்த இந்த பெண்கள் குழு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை தொடங்கியுள்ளனர்.
பைன் மர பேப்பர் மூலம் இவர்கள் தயாரிக்கும் நாப்கின்கள் மண்ணில் மட்கும் தன்மை உடையவை. தீரதன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த நாப்கின்களுக்கு உலகம் முழுவதும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பெண்கள் குழு பேட்மேன் படத்தை சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ முருகானந்தம் தான் எங்களுக்கு உத்வேகமாக இருந்தார். அவரது வரலாற்றை திரைப்படத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றனர்.
Average Rating