சக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டில் சிக்கி தீவிரவாதி பலி!!
Read Time:1 Minute, 23 Second
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர காவல் நிலையத்தில் இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஸ்தக் அகமது சோப்பானை தப்பிக்க வைக்க சக தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால் அந்த குண்டில் சிக்கி அந்த தீவிரவாதியே பலியானான். இது குறித்து போலீசார் கூறியதாவது: சிறையில் இருந்த தீவிரவாதி முஸ்தாக், தப்பிக்கும் முயற்சியாக காவல் நிலையத்தின் வாயிலுக்கு சென்றுள்ளான்.
முன்பே திட்டமிட்டபடி போலீசாரின் கவனத்தை திசைத் திருப்பும் முயற்சியாக, வெளியிலிருந்து அவனது அமைப்பை சேர்ந்த மற்ற தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் முஸ்தாக் அருகில் விழுந்து வெடித்ததால் அதில் அவன் சிக்கி பலியானான். இதில் மெஹ்ராஜ் தின் என்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.இவ்வாறு போலீசார் கூறினார்.
Average Rating