இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸஷுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு!

Read Time:1 Minute, 53 Second

ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுத் தொடரில் அதிகூடிய விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்டுள்ள இந்த பதவி உயர்வின்படி இராணுவத்தின் இரண்டாவது லெப்டினன்ட்டாக இவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவில் கடமையாற்றும் அஜந்த மெண்டிஸ் கிரிக்கட் விளையாட்டில் சாதனை படைத்து இராணுவத்துக்கும் நாட்;டுக்கும் புகழை ஈட்டித் தந்துள்ளமைக்காகவே அவருக்கு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். கடந்த 6ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கட்டுக்களை இவர் கைப்பற்றினார். இத்தொடரில் மொத்தமாக 17 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு இறுதிப் போட்டியின் கதாநாயகனகாவும் தொடரின் கதாநாயகனாகவும் இவர் இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லையில் நமீதாவுக்கு கோயில்!
Next post முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு!