புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்
தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப வடக்கில் தற்போது எடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகளினால் புலிகள் தரப்பில் மாதாந்தம் 400 முதல் 450 வரையிலான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவருவாகக் கூறியுள்ளார். மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 9,000 புலிகள் இயக்கத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் இந்நிலையில் புலிகள் இயக்கத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேச மட்டங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மொத்தம் சுமார் 5,000 உறுப்பினர்களே புலிகள் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் தீபகற்பப் பிரதேசங்களில் சுமார் 1,500 புலிகள் இயக்கத்தினரும் மன்னார், வவுனியா ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் மொத்தம் சுமார் 1,500 புலிகளும் கிளிநொச்சியில் 2,000 புலிகளும் மட்டுமே தற்போது செயற்படுகின்றனர். இதேவேளை, புலிகள் இயகத்தினரால் மேற்கொள்ளப்படும் புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்க்கும் நடவடிக்கைகளும் தற்போது குழப்ப நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் புலிகள் இயக்கத்தினர் அனைத்து இராணுவ நடவடிக்கைகளின்போது படையினரின் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமது உயிரைக் காப்பாற்றும் நோக்கில் பின்வாங்கி வருவதும் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பியோடிவருவதுமேயாகும். ஆனால், அதேவேளை, இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பதற்கான பாதுகாப்புத்துறை நடவடிக்கைகள் சுமுகமாக நடந்துவருவதுடன் கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் 16,000 பேர் அரச படைகளில் புதிதாகச் சேர்ந்தும் உள்ளனர்.
Average Rating