அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர்
Read Time:1 Minute, 8 Second
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர்
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடனே உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளர்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கும் விடுதலைப் புலிகளின் பகுதிகளிக்கும் அகதிகளாக தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.
இத் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரசாத் சமரசிங்க, பொதுமக்களுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். அவர்களைப் பாதுகாக்க நாம் எல்லாவற்றையும் செய்து வருகிறோம்” என்றார்.
Average Rating