ஸ்பெயின் குண்டு வெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு

Read Time:1 Minute, 53 Second

மார்ச் 2004ல் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடந்திருந்த சுமார் இருநூறு பேரை பலிகொண்ட பயணிகள் ரயில் தொடர் குண்டுவெடிப்புகள் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டிருந்தமைக்காக கடந்த அக்டோபர் மாதம் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த 21 பேரில் இந்த நால்வரும் அடங்குவர். தற்போது விடுவிக்கப்பட்டிருப்பவர்களில் 3 பேருக்கு பயங்கரவாதக் குழுவொன்றின் உறுப்பினராய் இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அச்சமயம் 12 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. வெடிப்பொருட்களை வழங்கியதான குற்றச்சாட்டின் பேரில் நான்காவது நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தவிர இந்தக் குண்டுத்தாக்குதல்களின் சதித்திட்டத் தலைவர் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்த “எகிப்துக்காரர் முகம்மது” என்றழைக்கப்படும் ரபெய் உஸ்மான் நிரபராதி என்ற கீழ் நீதிமன்றத்தின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு
Next post வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 8000 படைவீரர்கள்