ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
Read Time:48 Second
வவுனியா ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணில் காவற் கடமையிலிருந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இவர், வவுனியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனளிக்காத நிலையில் பின்னர் இவர் உயிரிழந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating