எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்
Read Time:1 Minute, 6 Second
இலங்கைக்கான தனது வருகையால் தற்போதைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதித் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
எரிக் சொல்ஹெய்மின் ஊடக அலுவலர் எஸ்பென் குல்லிக்ஸ்டன் இது தொடர்பில் கூறுகையில்,
தனது இலங்கை வருகை பற்றி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தனது பயணத்தின் மூலம் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த வாரத்தில் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் இலங்கை வருகை தருகின்றனர்.
Average Rating