கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை! (உலக செய்தி)

Read Time:4 Minute, 45 Second

இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் வலியுறுத்தல் மூலம் கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருவதும், அதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த 13 நாடுகளும் அண்மையில், ஐ.நா. மனித உரிகைள் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதின. அதில், கொரோனா நோய்த் தொற்று நெருக்கடிக்கு இடையே, அந்த பாதிப்பு குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் பல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு தவறான தகவல்கள் பரவுவது, விலைமதிப்பற்ற மனித உயிா்களைக் கடுமையாக பாதிக்கும். எனவே, இதுபோன்ற தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.

அதனைத் தொடா்ந்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், மக்களுக்கு கொரோனா குறித்த துல்லியமான தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையிலும் சரிபாா்க்கப்பட்ட தகவல் (வெரிஃபைடு) என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்புக்கான துறை, உலக நாடுகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: கொரோனா நெருக்கடியைச் சந்தித்து வரும் உலக நாடுகள், அதுகுறித்த தவறான தகவல்கள், வெறுப்பு பேச்சுக்களாலும், அபாயகரமான மருத்துவ ஆலோசனகளாலும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்கள் ஆன்-லைன் மூலமாகவும், சமூக ஊடக செயலிகள் மூலமாகவும் பரப்பப்படுகின்றன. இதைத் தடுக்க, விஞ்ஞானிகளும், ஐ.நா. போன்ற அமைப்புகள்தான் சரியான தகவலை மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும்.

அந்த வகையில், ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்புக்கான துறை அறிமுகம் செய்துள்ள சரிபாா்க்கப்பட்ட தகவல் திட்டம், அறிவியல், ஒற்றுமை, தீா்வு என்ற மூன்று தத்துவங்களின் கீழ் செயல்பட்டு சரியான தகவலை மக்களிடம் கொண்டு சோ்க்க உதவும். அதோடு, பருவநிலை மாற்ற பாதிப்புகளைச் சமாளிப்பது மற்றும் ஏழ்மை, பசி போன்ற சவால்களுக்கு தீா்வு காணவும் இது உதவும்.

உலக மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து தன்னாா்வ தகவலா்களாக வரவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதன் மூலம், நம்பகமான தகவல்கள் பரப்பப்பட்டு, அவா்களுடைய குடும்பமும், சா்வதேச சமூகமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று அவா் கூறினாா்.

இதுகுறித்து ஐ.நா. சா்வதேச தகவல்தொடா்புக்கான துணைச் செயலா் மெலிஸா ஃபிளமிங் கூறுகையில், கொரோனா குறித்த அதிவேக டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி சமூக வளா்ச்சியையும் பாதிக்கும். இதற்கு தீா்வு காணும் வகையிலேயே சரிபாா்க்கப்பட்ட தகவல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தியா, அவுஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜாா்ஜியா, இந்தோனேசியா, லாத்வியா, லெபனான், மொரீஷிஸ், மெக்ஸிகோ, நோர்வே, செனகல், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட இந்த 13 நாடுகளின் முயற்சி மூலம் ஐ.நா. எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அதன் 132 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை!! (கட்டுரை)
Next post இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 332,424 ஆக உயர்வு !! (உலக செய்தி)