புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு
Read Time:1 Minute, 11 Second
இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பிரதேசத்தில் இருக்கும் புதுமாத்தளன் மருத்துவமனைப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கிழக்கு கடற்கரை பகுதிவழியாக புதுமாத்தளன் பகுதிக்குள் தாங்கள் புகுந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என அரசு விதித்திருந்த 24 மணிநேர காலக்கேடு இன்று மதியம் 12.00மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று தொடக்கம் இன்றுவரை 49,000பொதுமக்கள் போர் பிரதேசங்களிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
Average Rating