வவுணதீவில் துப்பாக்கிப் பிரயோகம், பால் விற்கச் சென்றவர் உயிரிழப்பு
Read Time:56 Second
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு பிரதேசத்திற்கு பால் விற்பனைக்காக சென்றவரின்மீதே ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 26வயதுடைய வைரமுத்து ராமச்சந்திரன் என்றும் வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை ஆயித்தியமலை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating