புலிகளின் பிடியில் சிக்கியிருந்த கிறிஸ்தவ போதகர்கள், கன்னியாஸ்திரிகள் 21பேர் படையினரிடம் தஞ்சம்
Read Time:1 Minute, 14 Second
வன்னியின் முல்லைத்தீவு புதுமாந்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கன்னியாஸ்தரிகள் என 21பேர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முற்பகல் 10.30மணியளவில் ஒருவாறு அங்கிருந்து தப்பிவந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் முள்ளியவளைப் பகுதியில் உள்ள படையினரிடம் தஞ்சமடைந்ததாகவும், இவர்கள் பெந்தகொஸ்தெ சபையைச் சேர்ந்தவர்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மற்றும் ஆலங்குளம் பிரதேசங்களில் நேற்று படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 300, மதிவெடி 01, ஆர்.பி.ஜி. குண்டு 01, மிதிவெடி பியூஸ் 07 என்பவற்றை மீட்டுள்ளனர்.
Average Rating