கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்

Read Time:2 Minute, 10 Second

karunaதனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) பொலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா குழுவினர் என தம்மை கூறிக்கொண்டு கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை கப்பல் கேட்கும் கும்பல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதை அடுத்தே கருணாஅம்மான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை எனக்கூறிய கருணாஅம்மான் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். கண்டியில் கப்பம் கோரும் விடயம் பற்றி தெரிய வருவதாவது, வர்த்தகர்களை அச்சுறுத்தி வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிங்கள பெண்ணொருவரும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் தொடர்பு என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக சங்கத்தினர் கண்டி பொலீஸ் பொறுப்பதிகாரி, மத்திய மாகாண பிரதிப் பொலீஸ் மாஅதிபர் ஆகியோரை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளனர். இதுவரை பல வர்த்தகர்கள் அச்சம் காரணமான பணத்தினை வழங்கியுமுள்ளனர்.

Thanks… www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்

  1. Karuna has looted enough money he does not like his name connected to white van kidnapers and ransome takers. But he will remain the leader of the gang inofficially.

Leave a Reply

Previous post ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்
Next post மேல்மாகாணசபைத் தேர்தல், கம்பஹா, களுத்துறையில் ஆளும் கூட்டணி வெற்றி, கொழும்பில் எதிர்க்கட்சி வெற்றி!