வலைஞர்மடமும் கைப்பற்றப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு
Read Time:1 Minute, 4 Second
விடுதலைப் புலிகளின் இறுதி மறைவிடமான வலைஞர்மடத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் பகுதியை இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை கைப்பற்றியதாகவும்இ இந்தப் பகுதியை இராணுவத்தினர் இன்று அதிகாலை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் சிக்கியிருந்த 500 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கும் பாதுகாப்பு அமைச்சுஇ வலைஞர்மடவே விடுதலைப் புலிகளிடம் இறுதியாக எஞ்சியிருந்த பிரதேசம் எனக் கூறியுள்ளது.
Average Rating