ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை
Read Time:1 Minute, 10 Second
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் , அவரது மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தகவல் இந்தியாவுக்குக் கிடைத்ததும் பிரணாப் முகர்ஜி , அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரணாப் விசாரித்ததாக தெரிகிறது.
Average Rating