ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தவர் யாழ்ப்பாணத்தில் கைது
Read Time:1 Minute, 11 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய முயற்சித்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கல்கிஸ்ஸை நீதிமன்றில் வைத்து தெரிவித்துள்ளனர். இவர் அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக ஏற்கனவே இராணுவகேணல் ரஞ்சித் பெரேரா அவரது மனைவி கரீமா ஹமீட், ராமசாமி பிரபாகரன் மற்றும் சானக்க கலுதேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இவர்களின் தகவலின் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Average Rating