எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபட முடியாது -இராணுவத்தளபதி
Read Time:1 Minute, 23 Second
ஏந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபடமுடியாது எனவும் அவ்வாறு ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ சீPருடை அணியும் எந்தவொரு உயரதிகாரிக்;கோ அல்லது படைவீரருக்கோ அரசியலில் ஈடுபடும் உரிமை கிடையாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறு ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவசேவையில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபடுவோர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating