தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டவர் விளக்கமறியலில்
Read Time:1 Minute, 20 Second
தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் சாரதியொருவரின் பிணை மனுவை நிராகரித்த அனுராதபுரம் நீதிமன்ற நீதிபதி செல்வி தர்சிகா விமலசிறி, குறித்த ஆபாசப் படங்களை வீடியோவில் எடுப்பதற்கு ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த சாரதியின் காதலியைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலீசாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய ஒளிநாடா பொலீசாரின் கைவசமுள்ளது என்றும் அவை ஏற்கனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதென்றும் பொலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Average Rating