புலம்பெயர் தமிழர்கள் நாடுகடத்தப்படக்கூடிய அபாயம் -ரிவிர பத்திரிகை

Read Time:1 Minute, 42 Second

உலகெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகமெங்கிலும் சுமார் 4லட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் தஞ்சமடைந்துள்ள நபர்கள் தொடர்பில் குறித்த நாடுள் விரைவில் தீர்மானம் எடுக்கும் என அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நடவடிக்கை எடுக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக இது அமையக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக விளக்கி அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடுகடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலமை குறித்து உலகநாடுகள் திருப்தியடைந்துள்ளதால் அநேகமாக புலம்பெயர் தமிழர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அந்தப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் சாத்தியம்
Next post கப்பலுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை-இந்தோனேசிய அதிகாரிகள்