இந்தோனேசிய பூகம்ப சாவு 5782
Read Time:41 Second
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5782 பேர்தான் இறந்தனர் என்று அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் 36300 பேரே காயம் அடைந்தனர். 46 ஆயிரம் பேர் காயம் அடைந்ததாக முன்னர் வெளியான தகவல் சரியானதல்ல என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மே 27-ல் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 6234 பேர் இறந்ததாக கடந்த வாரம் சமூக விவகார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.